பழநி:'சட்டசபை தேர்தலில் பா.ஜ., போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பழனிசாமி மீண்டும் முதல்வராவது உறுதி' என, பா.ஜ., மாநில தலைவர் எல்.முருகன் கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நேற்று பா.ஜ., மாநில தலைவர் முருகன் சுவாமி தரிசனம் செய்து தங்கரதம் இழுத்தார். பின்னர் அவர் கூறியதாவது:தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. தாராபுரத்தில் நான் வெற்றி பெறுவேன். வெற்றி வேல் யாத்திரை துவங்கியது முதல் நான் அடிக்கடி பழநி முருகனை தரிசித்து வருகிறேன். தி.மு.க.,வுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் பண விநியோகம் செய்துள்ளனர். அவர்களுக்கு தமிழக மக்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டி உள்ளனர். ஆட்சியில் பங்கு குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும்" என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE