ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் இருந்து வருஷநாட்டிற்கு நேரடி பஸ் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருஷநாடு மலைப்பகுதி கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் தினமும் பல்வேறு பணிகளுக்காக ஆண்டிபட்டி வந்து செல்கின்றனர். தாலுகா அலுவலகம், கோர்ட், கருவூலம் ஆகியவை ஆண்டிபட்டியில் இருப்பதால் பொதுமக்கள் வந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.வருஷநாடு பகுதியில் இருந்து மாணவர்கள் பலர் ஆண்டிபட்டி அரசு, தனியார் கல்லுாரிகளில் படிக்கின்றனர். காலை 8:00மணிக்கு வருஷநாட்டில் இருந்து ஆண்டிபட்டிக்கும், மாலை 5:00 மணிக்கு ஆண்டிபட்டியில் இருந்து வருஷநாட்டிற்கும் அரசு பஸ் இயக்கப்பட்டது. சில ஆண்டுக்கு முன் இந்த சேவை நிறுத்தப்பட்டது.
தற்போது வருஷநாடு பகுதியை சேர்ந்தவர்கள் ஆண்டிபட்டியில் இருந்து திரும்புவதில் சிரமம் ஏற்படுகிறது. நீண்ட நேரம் காத்திருந்து தேனி பஸ்சில் ஏறி க.விலக்கு சென்று அங்கிருந்து அடுத்த பஸ் மாறி செல்ல வேண்டும். நேரடி பஸ் இன்றி இருமுறை பஸ் மாறுவதால் நேரம், பணம் கூடுதல் செலவாகிறது. ஆண்டிபட்டியில் இருந்து வருஷநாடு செல்ல மாலையில் இயக்கப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ----
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE