புதுச்சேரி; புதுச்சேரியில் புதிதாக 173 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சிகிச்சை பலனின்றி முதியவர் ஒருவர் இறந்தார்.புதுச்சேரியில் நேற்று முன்தினம்வரை 42,776 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் 1,149 பேருக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில் புதுச்சேரியில் 168 பேருக்கும், காரைக்காலில் 5 பேர் என மொத்தம் 173 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 42,949 ஆக உயர்ந்துள்ளது.இவர்களில், 453 பேர் மருத்துவமனையிலும், 1367 பேர் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 40,442 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கதிர்காமம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோரிமேடு, ராஜிவ் நகரைச் சேர்ந்த 67 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், கொரோனா தொற்றால் இறந்தோர் எண்ணிக்கை 687 ஆக உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் 56 சுகாதார பணியாளர்கள், 16 முன் களப் பணியாளர்கள், 465 பொதுமக்கள் என 537 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை 82,815 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE