புதுச்சேரி; தேர்தல் தொடர் பான தகராறில் எம்.எல்.ஏ., உட்பட ௩௦ பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.முதலியார்பேட்டை தொகுதியில் கடந்த 6ம் தேதி தேர்தல் தொடர்பாக, தி.மு.க. வேட்பாளர் சம்பத் ஆதரவாளர் சந்திரசேகரன் 40, என்பவருக்கும் அ.தி.மு.க.,வினருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில் சந்திசேகரன் தாக்கப்பட்டார். தடுக்க வந்த அவரது தாயார் கஸ்துாரியை, 64, தள்ளி விட்டனர்.புகாரின்பேரில், பாஸ்கர் எம்.எல்.ஏ., உள்ளிட்ட 30 பேர் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE