சங்கராபுரம்; சங்கை தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் லட்சுமிபதிக்கு பாராட்டு விழா, திருக்கோவிலுர் மாவட்ட கல்வி அலுவலராக பொறுப்பேற்றுள்ள சங்கராபுரம் பெண்கள் மேல்நிலை பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஆரோக்யசாமிக்கு பாராட்டு விழா, ஓவியர் கலைச்செழியனின் நுால் வெளியிட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.சங்கை தமிழ் சங்கத் தலைவர் சுப்பராயன் தலைமை தாங்கினார். வள்ளலார் மன்ற செயலாளர் நாராயணன், முத்துக்கருப்பன், செம்பியன்,கலியமுர்த்தி முன்னிலை வகித்தனர்.சங்க செயலாளர் சாதிக் வரவேற்றார்.ஆசிரியர் லட்சுமிபதி, மாவட்ட கல்வி அலுவலர் ஆரோக்யசாமி ஆகியோரை பாராட்டி டாக்டர் மகுடமுடி, டாக்டர் குமார், கவிஞர் ஆராவமுதன், சிவஞான அடிகள், புலவர் ெஜயராமன், டாக்டர் நெடுஞ்செழியன்,விஜயகுமார், தலைமை ஆசிரியை லட்சுமி, கல்லை தமிழ் சங்க செயலாளர் மதிவாணன்,முத்தமிழ் கலை இலக்கிய பேரவைத் தலைவர் முகமது உசேன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.பாராட்டுக்கு நன்றி தெரிவித்து ஆசிரியர் லட்சுமிபதி, டி.இ.ஓ., ஆரோக்யசாமி ஏற்புரை வழங்கினர். பொருளாளர் கோபால் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE