விழுப்புரம்: விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு போக்குவரத்தை சீரமைக்கும் சிக்னல் சீரமைக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில், சென்னை, திருச்சி, புதுச்சேரி, திருக்கோவிலுார் மார்க்கங்களில் வரும் வாகனங்கள் செல்லும் முக்கிய இடமாக உள்ளது. இதையொட்டி, வாகனங்களை சீராக அனுப்புவதற்காக அங்கு சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிக்னலில், சென்னை நெடுஞ்சாலை செல்லும் வாகனங்களுக்கு, நேரத்தை பிரதிபலிப்பது கடந்த சில தினங்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் நேரம் தெரியாமல் குழப்பத்தோடு வாகனங்களை ஓட்டி கொண்டு கடந்தனர். இதனால் விபத்து ஏற்படும் சூழலும் நீடித்தது.இது குறித்து தினமலரில் செய்தி வெளியாகியன. இதனை தொடர்ந்து, சிக்னலில் பழுது ஏற்பட்ட பகுதி துரிதமாக சீரமைக்கப்பட்டு, தற்போது சென்னை நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு, நேரத்தை பிரதிபலிக்கும் கருவி புதுப்பொலிவோடு காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஒட்டிகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE