திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே ஓட்டளிக்கச் சென்ற முதியவர் மயங்கி விழுந்து இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சி.மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் திருஞானசம்மந்தம், 71; இவர் நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் சி.மெய்யூர் கிராமத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்போட சென்றார். அப்போது 222வது பூத் உள்ளே சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்து சென்றனர். வீட்டிற்கு செல்லும் வழியில் அவர் இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE