பெண்ணாடம்; பெண்ணாடம் கிளை நுாலகத்தில் மாவட்ட நுாலக அலுவலர் பால சரஸ்வதி ஆய்வு செய்தார்.அப்போது, நுாலகத்தில் பராமரிக்கப்படும் வாசகர் வருகை பதிவேடு, நுால்கள் இருப்பு, புரவலர்கள், உறுப்பினர்கள் பதிவேடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, நடப்பு நிதி ஆண்டில் நுாலகத்தில் புதிய புரவலர் சேர்க்கை, உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்.நுாலகத்திற்குத் தேவையான தளவாட பொருட்கள் நன்கொடை பெற முயற்சிக்க வேண்டும் என கிளை நுாலகர் வீராசாமியிடம் அறிவுறுத்தினார்.நுாலகப் பணியாளர்கள், வாசகர்கள், உறுப்பினர்கள், வாசகர் வட்ட உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE