திட்டக்குடி; திட்டக்குடி அருகே தேர்தல் பணிக்காக பயன்படுத்திய வேன் கண்ணாடியை உடைத்தவரை போலீசார் கைது செய்தனர்.திட்டக்குடி அடுத்த செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னமுத்து, 27; இவர் நேற்று முன்தினம் மாலை குடிபோதையில் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில் இருந்த அதிகாரிகளை தேர்தல் பணி செய்ய விடாமல் இடையூறு செய்தார்.மேலும் அங்கு, தேர்தல் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த மகேந்திரா வேனின் கண்ணாடியை கல்லால் உடைத்தார்.இதுகுறித்த புகாரின் பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிந்து சின்னமுத்துவைக் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE