கடலுார்; அ.தி.மு.க., பிரமுகர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கடலுார் அடுத்த வழிசோதனைப்பாளையத்தைச் சேர்ந்தவர் கருணாகரன்; அ.தி.மு.க., பிரமுகர். இவர், வீட்டு சுவரில் இரட்டை இலை வரைந்திருந்தார். நேற்று முன்தினம் ஓட்டுப் பதிவு நடந்த நிலையில், ஓட்டுச்சாவடி இவரது வீட்டில் இருந்து 50 மீட்டர் துாரத்தில் இருந்தது. இதனால், சுவற்றில் இருந்த இரட்டை இலை சின்னத்தை வருவாய்த் துறையினர் அழித்தனர்.அப்போது, கருணாகரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தார்.வி.ஏ.ஓ., தமிழ்ச்செல்வி புகாரின் பேரில், கருணாகரன் மீது கடலுார், முதுநகர் போலீசார், வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE