திருவொற்றியூர்; குழாய்களில் குடிநீர் வராததால், மக்கள் தவியாய் தவிக்கின்றனர்.சென்னை, திருவொற்றியூர் மேற்கு, அம்பேத்கர் நகரில், குடிநீர் வாரியத்தின் சார்பில், குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. இரு நாட்கள் இடைவெளியில், ஒரு மணி நேரம் குடிநீர் வினியோகிக்கப்படுவதாக தெரிகிறது.கடந்த, 15 நாட்களாக, குடிநீர் குழாய்களில் தண்ணீர் வரவில்லை. இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. வாரியம், தற்காலிக நடவடிக்கையாக அவ்வப்போது லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்கிறது. அந்த குடிநீர், வெயில் காலத்திற்கு போதுமானதாக இல்லை. எனவே, குடிநீர் வாரிய அதிகாரிகள் சுதாரித்து, குடிநீர் தட்டுப்பாடிற்கு தீர்வு காண வேண்டும். குழாய்களில் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE