அண்ணா நகர்-கொரோனா பரவல் காரணமாக, காற்றிலிருந்து குடிநீரை பிரித்து எடுக்கும் நவீன இயந்திரத்தை, பயன்படுத்த முடியாமலேயே வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.சென்னையில், சில ஆண்டுகளுக்கு முன் குடிநீர் பஞ்சத்தால், கடுமையாக பாதிக்கப்பட்டனர். அப்போது, அண்ணாநகர் மண்டல அலுவலகத்தில், குடிநீர் பஞ்சத்தை சமாளிக்கும் விதமாக, 40 ஆயிரம் ரூபாய் செலவில், காற்றிலிருந்து குடிநீரை பிரித்து எடுத்து தரும், நவீன இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்டது.மின்சாரம் வாயிலாக இயக்கப்படும் இந்த இயந்திரம் வாயிலாக, நாள் ஒன்றுக்கு, 25 - 35 லிட்டர் வரை குடிநீர் கிடைத்து வந்தது. இதனால், கேன் குடிநீருக்காகும் செலவுகள் குறைப்பதோடு தண்ணீருக்காக அலைந்து திரிய வேண்டிய சூழ்நிலை இல்லாமல் போனது.ஆனால், இது ஒரு சில மாதங்களுக்கு தான். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக, நிலைமை மாறியது. கடந்த ஓரு ஆண்டுக்கு மேலாக, தொற்று அபாயம் காரணமாக, இந்த இயந்திரம் பயன்படுத்தப்படவில்லை. இதனால், பயன்பாடின்றி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE