சென்னை- சென்னை வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட, 79.78 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை, சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான, ஷார்ஜா நகரில் இருந்து, திருவனந்தபுரம் வழியாக, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று முன்தினம் மாலை, 5:50 மணிக்கு சென்னை வந்தது.அதில் வந்த, சென்னையைச் சேர்ந்த, முகமது ஆனாஸ், 28, என்பவரை, சந்தேகத்தின் அடிப்படையில், சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.அப்போது அவர் அணிந்திருந்த, 'சாக்ஸ்' உள்ளிருந்து, 59.18 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1.28 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.அதேபோல், துபாய் நகரில் இருந்து, உத்தர பிரதேசம் மாநிலம், லக்னோ வழியாக, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், நேற்று முன்தினம் இரவு, 7:50 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த, சென்னையைச் சேர்ந்த, நைனா முகமது, 30, என்பவரை, சுங்கத் துறையினர் சோதனையிட்டனர்.அதில், அவரது, ஆசனவாயிலிருந்து, 20.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 446 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 'தங்கம் கடத்திய இருவரும், உள்நாட்டு பயணியராக விமானத்தில் பயணித்து, கடத்தலில் ஈடுபட்டது' தெரிய வந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE