துரைப்பாக்கம்- ஓ.எம்.ஆரில், கழிவு நீர் லாரி மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லுாரி மாணவர்பலியானார்.கொருக்குப்பேட்டை, முத்தழகன் நகரைச் சேர்ந்தவர் சுகைபாஷா, 19; கல்லுாரி மாணவர். நேற்று முன்தினம், இருசக்கர வாகனத்தில், துரைப்பாக்கத்தில் உள்ள நண்பரை பார்க்க புறப்பட்டார். ஓ.எம்.ஆர்., பெருங்குடி சுங்கச்சாவடி அருகே உள்ள சிக்னலில், சாலையை கடக்க முயன்றபோது, கழிவுநீர் லாரி மோதி பலியானார்.இது குறித்து விசாரித்த, கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனரான, திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டியைச் சேர்ந்த புகழேந்தி, 23, என்பவரை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE