வேளச்சேரி-திருமணமாகி, எட்டு மாதம் ஆன பெண் தற்கொலை செய்தது தொடர்பாக, ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது.வேளச்சேரி, வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் தனசேகர், 38. இவர், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சோபனா, 33, என்பவருக்கும், எட்டு மாதத்திற்குமுன் திருமணம் நடந்தது.சோபனா, சில நாட்களாக, பெற்றோர் வீட்டில் தங்கினார். நேற்று முன்தினம், பெற்றோர் ஓட்டு போட செல்லும்போது, சோபனா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேளச்சேரி போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE