ஆனைமலை: பொள்ளாச்சி அடுத்த செமனாம்பதி அருகே தமிழக - கேரள மாநில எல்லையில், மருத்துவக் கழிவுகள் கொட்டிய, 3 டிப்பர் லாரிகளை விவசாயிகள் சிறைப்பிடித்தனர்.
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட செமனாம்பதி, தமிழக - கேரள மாநில எல்லையாக உள்ளது. இங்கு ரெட்டமடை பிரிவு என்ற பகுதியில், தனியார் தோட்டத்தில் இன்று (8ம் தேதி), மருத்துவ கழிவுகள் கொட்டியதாக, மூன்று டிப்பர் லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரத்தை விவசாயிகள் சிறைபிடித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஆனைமலை தாசில்தார் வெங்கடாசலம் தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சோதனை செய்தனர். இதில், வனத்தை ஒட்டிய பகுதியில் பட்டா நிலத்தில் நீண்ட குழிகள் தோண்டி, பல ஆண்டுகளாக மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டி புதைக்கப்பட்டது தெரியவந்தது. நிலத்தின் உரிமையாளர் சாஜூ ஆன்டனி மீது வழக்குபதிவு செய்து, போலீசார், வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE