நாகர்கோவில்:குமரி மாவட்டம், ஆனான்விளையை சேர்ந்தவர் சதீஷ் மனைவி பெர்லினிஷா, 35. இவர் கருங்கல் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்யூட்டர் பிரிவில் வேலை பார்க்கிறார்.
நேற்று முன்தினம் இரவு, 9.00 மணிக்கு பணி முடிந்து மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்த போது பின்னால் பைக்கில் வந்த நபர், இவரது கழுத்தில் இருந்த, 11 பவுன் செயினை பறிக்க முயன்றார்.நிலை தடுமாறி கீழே விழுந்த பெர்லினிஷா, திருடன், திருடன் என, சத்தம் போட்டுள்ளார். இதனால் அந்த நபர் தப்பியோடி விட்டார். புதுக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE