சென்னை:முகக்கவசம் அணிந்து வராவிட்டால் ஏப்ரல் 10ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விநியோகம் கிடையாது என தமிழக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் அமலாகிறது.

முககவசம் கட்டாயம்
இந்த நிலையில், வருகிற 10ஆம் தேதி முதல் முகக்கவசம் அணியாமல் வந்தால் பெட்ரோல், டீசல் வழங்கப்படமாட்டாது என்று பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE