மூணாறு:கேரளாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 2205 பேர் குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.கடந்த 24 மணி நேரத்தில் 63,901 பேருக்கு கொரோனா சோதனை நடந்தது.அதில் சுகாதாரதுறை ஊழியர்கள்25 பேர், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 173 பேர், தொடர்பு மூலம் 3858 பேர், கொரோனா பரவிய விதம் அறியாமல் 297 பேர் என 4353 பேர் பாதிக்கப்பட்டனர்.
பிப். 24ல் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4106ஆக இருந்தது. 43 நாட்களுக்கு பிறகு பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 4 ஆயிரத்தை கடந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று 18 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 4728 ஆக அதிகரித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE