பொள்ளாச்சி:திண்டுக்கல்லை சேர்ந்த, பெண் விடுதலை கட்சி தலைவர் சபரிமாலா, பொள்ளாச்சியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தார்.வேட்புமனு தள்ளுபடியானதால், பொள்ளாச்சி ஜோதிநகர் டி காலனியில் தங்கி, தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் முன்பக்கம் நிறுத்தப்பட்டிருந்த, சபரிமாலாவின் காரை, மர்ம நபர்கள் தாக்கி சேதப்படுத்தினர்.இரும்புக்கம்பியால் தாக்கியதில், கார் கண்ணாடி சேதமடைந்தது. இது குறித்து, சபரிமாலா புகாரின் பேரில், கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE