கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலின் மேற்கு பகுதியில், தார்ரோடு போடாமல் தாமதிப்பதால், நடைபயணமாக செல்லும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.சூலக்கல் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் சிறப்பு பூஜைகளும், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக மற்றும் அலங்கார பூஜைகள் நடக்கின்றன.இக்கோவிலுக்கு, வெளியூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, மாரியம்மனை வழிப்பட்டு செல்கின்றனர். பக்தர்கள் எளிதாக வந்து செல்ல, கோவிலைச் சுற்றி நான்கு திசைகளிலும் தார்ரோடு உள்ளது. இதில், கோவிலின் மேற்கு பகுதியில் உள்ள தார்ரோடு சீரமைப்பதற்காக, பழைய தார்ரோடு தோண்டப்பட்டது. ஆனால், ரோடு போடப்படாமல், அப்படியே விடப்பட்டுள்ளது. இவ்வழியாக வாகனங்களும் வரமுடியாமல் கோவிலின் கிழக்கு பகுதியைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. கோவிலின் மேற்கு பகுதியைப் பயன்படுத்த சிரமமாக உள்ளது. விரைவில் புதிதாக தார்ரோடு போட, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE