சிவகங்கை : நாகபட்டினத்தில் சம்மன் வழங்க சென்ற நீதிமன்ற பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து, சிவகங்கையில் நீதிமன்ற கட்டளை நிறைவேற்றுவோர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நீதிமன்ற கட்டளை நிறைவேற்றுவோர் சங்க மாவட்ட தலைவர் செல்வக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். நீதித்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் செல்லப்பாண்டி, செயலாளர் சுரேஷ், துணை தலைவர் மனோகரன், பொருளாளர் ஹக்கீம் உட்பட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE