ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் பல இடங்களில் காவிரி குடிநீர் வினியோகம் இல்லாததால் மக்கள் குடிநீருக்கும் தவிக்கின்றனர்.
ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் பல இடங்களில் காவிரி குடிநீர் வினியோகம் 5 நாட்கள், வாரம் ஒரு முறைதான் கிடைக்கிறது. அதுவும், அரை மணி நேரம்தான் குடிநீர் வினியோகம் உள்ளது. இதனால் ஒரு குடும்பத்தில்ஒரு குடம் தண்ணீர் கூட பிடிக்க முடியாத நிலை உள்ளது.கடந்த இரண்டு வாரமாக காட்டுப்பிள்ளையார் கோவில் தெரு, மகர்நோன்பு பொட்டல், தங்கப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி குடிநீர் வினியோகம் சீராக இல்லை.
நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறைதான் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் குடிநீர் வருவதால் மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.இப்பகுதியில் சுமார் 1500 குடும்பங்களுக்கும் மேல் உள்ள நிலையில் காவிரி குடிநீர் கிடைக்காததால் மக்கள் தவிக்கின்றனர். சீரான குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.---
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE