முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே சித்திரங்குடி கிராமத்தில் சிலைக்காரி அம்மன் கோயில் பங்குனி களரி பொங்கல் விழா நடந்தது.
இதையொட்டி பக்தர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.பக்தர்கள் பிள்ளையார் கோயிலில் இருந்து ஊர்வலமாக பால்குடம் எடுத்து கோயிலுக்கு வந்தனர்.பின் அம்மனுக்கு பால் அபிஷேகம் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பக்தர்கள் பொங்கல், கிடா வெட்டி நேர்த்திகடன் செலுத்தினார்கள்.
மாலை 108 திருவிளக்கு பூஜை நடந்தது. அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடந்தது.குல தெய்வமாக வழிபடும் மதுரை சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், உட்பட வெளிமாவட்டங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE