ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் பாலம் கடல் அரிப்பு தடுப்பு சுவரை உடைத்ததால், பாலத்திற்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
பாம்பன் கடலில் அமையும் புதிய ரயில் பாலம் நடுவில் அமையும் துாக்கு பாலத்திற்கு 200 அடி நீளத்தில் இரும்பு துாண்கள் லாரியில் கொண்டு வர உள்ளனர். பாம்பன் கடலோரத்தில் லாரியை நிறுத்தி, அங்கிருந்து மிதவை படகில் இரும்பு துாண்களை ஏற்றி செல்ல உள்ளனர்.ராட்சத இரும்பு துாணை லாரியில் ஏற்றி வரும் போது, தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் கடல் அரிப்பு தடுப்பு சுவர், மின்சார டிரான்ஸ்பார்மர் இடையூறாக உள்ளது.
ஆனால் டிரான்ஸ்பார்மரை அகற்றாமல், நேற்று 30 அடி நீளம், 6 அடி அகலத்தில் தடுப்பு சுவரை உடைத்து அகற்றினர். இதனால் எதிர்காலத்தில் அரிப்பு ஏற்பட்டு தேசிய சாலை பாலத்திற்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலை பாலத்தை பாதுகாக்க உடைத்த பகுதியில் தரமான கான்கிரீட் சுவர் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE