சென்னை:'கொரோனா பரவலை தடுக்க, அனைவரும் அரசின் அறிவுரைகளை, பின்பற்ற வேண்டும்' என, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இந்தியா, இரண்டாவது கொரோனா பரவலை சந்தித்து வருகிறது. கொரோனா தொற்றிலிருந்து, தமிழக மக்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தின ரையும், குறிப்பாக முதியவர்களை, கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.
கிருமி நாசினியால், கைகளை சுத்தம் செய்ய வேண்டும். தகுதியுள்ள நபர்கள், கொரோனா நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.கொரோனா நோய் பரவலை தடுக்க, தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க, அரசு கூறும் அறிவுரைகளை, அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, கவர்னர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE