ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் விவசாயிகள் கரிமூட்டம் தொழில் செய்வதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள், தங்களது பட்டா நிலங்களில் உள்ள கருவேல மர விறகுகளை வெட்டி கரிமூட்ட தொழிலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சிறிய வகை விறகுகளை நேரடியாக விறகுகளாகவும், பெரிய வகை துண்டு விறகுகளை கரிமூட்டம் மூலம் கரிகளாக்கியும் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது இப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் கரிமூட்டம்தொழிலில் ஈடுபடுகின்றனர். இதனால் இத்தொழிலில் ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE