சிவகாசி : உள்ளாட்சி நிர்வாகம், தாலுகா அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை மீண்டும் துவங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்நதால் ஒரு மாத காலமாக மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்வதில் அதிகாரிகள் மெத்தனமாக இருந்தனர். தேர்தலை காரணம் காட்டி பிரச்னைகள் தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களும் சூழ்நிலையை புரிந்து கொண்டு திரும்பினர். தற்போது தேர்தல் முடிந்து விட்டதால் அலுவலகங்களில் வழக்கமான பணிகள் நடக்கிறது. மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் கிடப்பில் உள்ள பணிகளை துரிதமாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE