விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று அய்யனார் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 32 வயது ஆண் மதுரை அரசு கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் பலியானார்.இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அய்யனார் நகரில் பாவாலி ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நீக்கம் செய்யப்பட்டது.அப்பகுதியில் வசிக்கும் 16 பேருக்கு கொரோனா பரிசோதனைக்கான திரவ மாதிரி சேகரிக்கப்பட்டது.இப்பகுதியில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடுகள் நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE