பெரியகுளம் : பெரியகுளத்தில் மாமரங்களை தொடர்ந்து தென்னை மரங்களுக்கும் மண் வளம் காப்பதற்கு இயற்கை உரமாக எருக்கஞ்செடி பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
பெரியகுளம் பகுதியில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் தென்னை மற்றும் மா விவசாயம் செய்யப்படுகிறது. மா விவசாயிகள் பலர் இயற்கை உரங்களை மரங்களுக்கு இடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.மரங்களை சுற்றி ஒன்று முதல் இரண்டு அடி குழி தோண்டி எருக்கஞ்செடிகளை கொட்டிமண்ணை போடுகின்றனர். அதன் மீது தண்ணீர் விடுகின்றனர். குறைந்த விலையில் வாங்கும் எருக்கஞ்செடிகளால் அதிகம் மகசூல் கிடைத்ததின் பலனாக தென்னை, கரும்பு, வாழை மரங்களுக்கும் இதே இயற்கை உரம் பயன்படுத்தப்படுகிறது.
எருக்கஞ்செடி விற்பனையாளர் முத்துகிருஷ்ணன் கூறியதாவது: ஒரு டிராக்டரில் 1500 கிலோ எருக்கஞ்செடிகள் ரூ. 2500 முதல் ரூ. 3000 வரை விற்பனையாகிறது. இதனை மண்ணில் இட்டு உழும்போது மண்வளம் பெருகுவதுடன் மகசூல் அதிகரிப்பதால் வரவேற்பு அதிகளவில் உள்ளது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE