திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சமூக ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் நடந்த மீன்பிடி திருவிழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் சிலுவத்தூர் அருகே புகையிலைப்பட்டியில் உள்ளது வலைபிடிச்சான் குளம். பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த இக்குளம் கடந்தாண்டு பெய்த மழையால் நிரம்பியது. அப்பகுதி மக்கள் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மீன் குஞ்சுகளை வாங்கி விட்டனர். மீன்கள் வளர்ந்த நிலையில் நேற்று கிராம மக்கள் கலந்து கொண்ட மீன்பிடி திருவிழா நடந்தது.கண்மாய் பாசன விவசாயிகள் குளக்கரையில் கொங்கியம்மனை வழிபட்டு துவக்கி வைத்தனர்.
புகையிலைப்பட்டி, ராயப்பன்பட்டி, குப்பமரத்துப்பட்டி, ராமநாதபுரம், மணியகாரன்பட்டி, வன்னியபட்டி, சிலுவத்துார் பொதுமக்கள் ஒரே நேரத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர். முழங்கால் அளவு தண்ணீரில் வலை மற்றும் கச்சாவை பயன்படுத்தி மீன்களை பிடித்தனர். கட்லா, ரோகு, விரால், அயிரை என சிறு மீன்கள் முதல் 1 கிலோ எடை உள்ள மீன்கள் வரை பிடிபட்டன. கிடைத்த மீன்களை மகிழ்ச்சியுடன் கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE