சென்னை:''கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக, கடந்த ஆண்டில், நாட்டின் எட்டு பெருநகரங்களில் வீடு விற்பனை, 50 சதவீதம் வரை சரிந்துள்ளது,'' என, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'கிரெடாய்' தேசிய தலைவர் ஹர்ஷ் வர்தன் பட்டோடியா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக, 2020ல், சென்னை உள்ளிட்ட எட்டு பெருநகரங்களில், வீடுகள் விற்பனை, 40 முதல், 50 சதவீதம் வரை குறைந்தது. கொரோனா இரண்டாவது அலையின் போது, பெரிய அளவில் ஊரடங்குக்கு வாய்ப்பு இருக்காது. இதனால், மக்கள் புதிய வீடு வாங்கும் திட்டங்களை நிறைவேற்ற முன்வருவர் என, எதிர்பார்க்கிறோம்.
பல்வேறு பெருநகரங்களில், வீடு விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது; 2019ல் இருந்த அளவுக்கு, இந்த ஆண்டு வீடு விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். முத்திரை தீர்வை, பத்திரப்பதிவு தொடர்பான கோரிக்கைகள், ஜி.எஸ்.டி., பிரச்னை குறித்து, அந்தந்த மாநில அரசுகளிடமும், மத்திய அரசிடமும் தொடர்ந்து முறையிட்டு வருகிறோம். விரைவில், நல்ல முடிவு ஏற்படும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, பட்டோடியா கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE