திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தொகுதிகளுக்கான 5,516 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.
அங்கு துணை ராணுவம், போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு சுழற்சி முறையில் கண்காணிக்கின்றனர். இது தவிர 150 க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி., கேமராக்களால் கண்காணிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.ஐ.ஜி., முத்துச்சாமி ஆய்வு செய்தார். ஓட்டுப்பதிவு வைக்கப்பட்டுள்ள அறை, கண்காணிப்பு அறை, போலீசார், துணை ராணுவத்தினரின் பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE