ஆண்டிபட்டி : குறுகிய நாட்களில் பலன் தரும் சிறு தானியங்கள் சாகுபடியில் ஆண்டிபட்டி சுற்றுப்பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இப்பகுதியில் ரெங்கசமுத்திரம், நாச்சியார்புரம், குருவியம்மாள்புரம், கோயில்பட்டி, கரட்டுப்பட்டி உட்பட பல கிராமங்கள் வறட்சியானவையாகும். இப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரத்தை மட்டுமே நம்பி விவசாயம் நடந்து வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்துள்ளது. இதனால் குறுகிய நாட்களில் பலன் தரும் சிறுதானியங்களான சோளம், கம்பு, மக்காச் சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.--
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE