திண்டுக்கல் : சீசன் இல்லாததால் திண்டுக்கல்லில் மருத்துவ குணமுள்ள பழு பாகற்காய் கிலோ ரூ.200 க்கு விற்றது.ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், பழநி, நத்தம் பகுதியில் பழு பாகற்காய் குறைந்த அளவில் சாகுபடியாகிறது.
அக்டோபர், நவம்பர் இதன் சீசன். தற்போது சீசன் இல்லாததால் மதுரை சோழவந்தான், விருதுநகர், கரூரில் இருந்து விற்பனைக்கு வருகிறது.பலாப்பழம் உருவில் மிகச்சிறியதாக இருக்கும் இந்தப் பழு பாகற்காய் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.சர்க்கரை, இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர். மருந்து தயாரிப்பிலும் முக்கியத்துவம் வகிக்கிறது. ஒரு கிலோ ரூ.200 க்கும், வரத்து அதிகரிப்பால் பெரிய பாகற்காய் கிலோ ரூ.28 க்கும் விற்பனையானது.
வியாபாரிகள் கூறுகையில், 'சீசன் நேரத்தில் கிலோ ரூ.30 வரை விற்பனையாகும். தற்போது சீசன் இல்லாததால் வரத்து குறைந்துள்ளது. மருத்துவ குணம் உள்ள காய் என்பதால் விலை அதிகம் இருந்தாலும் விரும்பி வாங்குகின்றனர்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE