போடி : தென்திருவண்ணாமலை எனப்படும் போடி பரமசிவன் கோயிலில் சித்திரை திருவிழாவுக்கு கொடிமரம் நடும் விழா நேற்று நடந்தது.
முன்னதாககாலை 7:35 மணியளவில் பெரியாண்டவர் கோயிலில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கொண்டு செல்லப்பட்டு கொடிமரம், 11:00 மணியளவில் பரமசிவன் கோயிலில் நடப்பட்டது. அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமை வகித்தார். தக்கார் சுரேஷ், செயலாளர் பேச்சிமுத்து, பொருளாளர்கள் முத்துராஜ், துணைச்செயலாளர் ஆறுமுகம், வர்த்தகர்கள் சங்கம் மற்றும் அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவனுக்கு அபிேஷகம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. சுவாமி அலங்காரம், சிறப்பு பூஜைகளை அர்ச்சகர்கள் சுந்தரம், பரமசிவம் செய்திருந்தனர். சித்திரை திருவிழா ஏப். 15 ல் துவங்கி ஏப்.22 வரை நடக்க இருந்தது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE