ஓசூர்:சாமியானா பந்தல் அமைக்கும்போது மின்சாரம் பாய்ந்து நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.தமிழக எல்லை ஓசூர் அருகே கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இன்டபெலே கிராமத்தில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்ட தனியார் கட்டுமான நிறுவனம் நேற்று பூமி பூஜை செய்ய இருந்தது.
இதற்காக கட்டுமானம் நடக்கும் இடத்தில் நேற்று முன்தினம் சாமியானா பந்தல் அமைக்கும் பணியில் நான்கு தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் பந்தல் அமைக்க இரும்பு கம்பியை துாக்கிச்சென்றனர். அந்த வழியாக மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் இரும்பு கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து நான்கு தொழிலாளர்களும் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து அத்திப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினர்.அதில் இறந்த தொழிலாளர்கள் பந்தல் அமைக்கும் தொழில் செய்பவரிடம் பணியாற்றி வந்ததும் 30 - 35 வயதுடையவர்கள் என்பதும் தெரிந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE