கள்ளக்குறிச்சி - கள்ளக்குறிச்சி அருகே ஸ்கூட்டி மீது பைக் மோதியதில் வாலிபர் இறந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த நின்னையூரைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் பரமசிவம்,24; இவர், நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் நின்னையூர்-குடியநல்லுார் சாலையில் ஸ்கூட்டியில்சென்றார். நின்னையூர் வனப்பகுதி அருகே சென்றபோது எதிரே வந்த பைக், ஸ்கூட்டி மீது மோதியது. இதில், படுகாயமடைந்த பரமசிவம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE