சின்னசேலம்- சின்னசேலத்திலிருந்து ரயில் மூலம் நெல் அறுவடை இயந்திரங்களை, இரண்டாவது சீசனுக்காக வெளி மாநிலத்திற்கு கொண்டு செல்லும் பணிகள் நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் 4,000 நெல் அறுவடை இயந்திரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் மார்ச் முதல் ஏப்ரல் வரை மற்றும் அக்டோபர் முதல் நவம்பர் வரை என இரு சீசன்களில் நெல் அறுவடை பணிகளுக்கு ஆந்திரா, தெலுங்கானா, விஜயவாடா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு அறுவடை இயந்திரங்கள் கொண்டு சென்று மீண்டும் எடுத்து வரப்படுகிறது.இதனால் இயந்திரங்களின் டீசல் செலவு, டோல்கேட் கட்டணம், வழியில் போலீசார் பணம் வசூலிப்பது என பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இந்நிலையில், இவர்களின் கோரிக்கைகளை ஏற்ற ரயில்வே நிர்வாகத்தினர் கடந்த அக்டோபர் மாதம், முதல் முறையாக ரயில் மூலம் நெல் அறுவடை இயந்திரங்களை வெளி மாநிலத்திற்கு அனுப்பும் பணிகளை தொடங்கினர். இதில் தொடர்ச்சியாக ஆறு முறை அனுப்பப்பட்டது.இந்நிலையில், தற்போது இரண்டாவது சீசனுக்காக நெல் அறுவடை இயந்திரம், மினி லாரி, டிராக்டர் உட்பட 100க் கும் மேற்பட்ட இயந்திரங்கள், ரயில்களில் ஏற்றி ஆந்திர மாநிலம், ஏழூர் பகுதிக்கு அனுப்பும் பணி நேற்று நடந்தது. ரயில்வே நிர்வாகம் இயந்திரங்களுக்கான வாடகை தொகையாக 10 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE