காட்டுமன்னார்கோவில்- காட்டுமன்னார்கோவில் அருகே காணாமல் போன இளம்பெண்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.காட்டுமன்னார்கோவில் அடுத்த எள்ளேரி சாட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி, 50; இவரது மகள் கல்கி, 20; இவர், 10ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவரை கடந்த 5ம் தேதி முதல் காணவில்லை.இதேபோன்று, அதே பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது 17 வயது மகளைக் கடந்த 6ம் தேதி முதல் காணவில்லை.இதுகுறித்து தனித்தனியே கொடுத்த புகார்களின் பேரில், காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE