விருத்தாசலம் - விருத்தாசலம் ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர், எஸ்.பி., பார்வையிட்டனர்.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், 'ஸ்ட்ராங் ரூம்' அமைக்கப்பட்டு அங்கு விருத்தாசலம், திட்டக்குடி சட்டசபை தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு மற்றும் 'விவி பாட்' இயந்திரங்கள் வைக்கப்பட்டு, அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் காலை 'சீல்' வைக்கப்பட்டது.மேலும், கல்லுாரி முகப்பு வளாகம், ஸ்ட்ராங் ரூம் முகப்பு, ஸ்ட்ராங் ரூம் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், ஓட்டு எண்ணும் மையம் உட்பட கல்லுாரி வளாகத்தில் பாதுகாப்பு பணிகள் குறித்து, கலெக்டர் சந்திரசேகர சகாமுரி, எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.அப்போது, பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கிய அவர்கள், கல்லுாரி வளாகத்துக்குள் வேட்பாளர்களை மட்டும் அனுமதிக்க ஆலோசனை வழங்கினர். அதன்படி, வேட்பாளர்கள் சிலர், நேற்று காலை, மாலை வேளைகளில் ஓட்டு எண்ணும் மையத்தை பார்வையிட்டுச் சென்றனர்.தேர்தல் பொது பார்வையாளர் பிரகாஷ், சப் கலெக்டர் பிரவீன்குமார், தாசில்தார் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE