தி.நகர்- மாம்பலம் கால்வாயில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற, மாநகராட்சி நடவடிக்கை எடுக்காததால் கொசு தொல்லை அதிகரித்துள்ளதாக, அப்பகுதிமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.சென்னையில், 2015ம் ஆண்டு, டிசம்பரில் பெய்த கன மழையால், பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அதற்கு, மழைநீர் கால்வாய்கள் சரிவர துார் வாரப்படாதது தான் காரணம் என்ற புகார் எழுந்தது.இதையடுத்து, அனைத்து கால்வாய்களையும் துார் வாரி, தடுப்பு சுவர் அமைக்க, மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அந்தந்த மண்டலத்திற்கு உட்பட்ட கால்வாய்களை துார் வாரும் பணியில், பொறியாளர்கள் ஈடுபட்டனர்.ஆனால், கோடம்பாக்கம் மண்டலம், சி.ஐ.டி.நகர் மாம்பலம் கால்வாயை ஒட்டி தடுப்பு சுவர் மட்டும் அமைத்த அதிகாரிகள், அவற்றை துார் வார எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், தற்போது நீரோட்டம் தடைபடும் அளவிற்கு பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து காணப்படுகின்றன. மேலும், கொசு உற்பத்தி அதிகரித்து, சுற்று வட்டார பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கால்வாயை துார் வாருவதுடன் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE