கே.கே.நகர்- ஒரே இடத்தில், 17 குப்பை தொட்டிகள் வைத்திருப்பதால், துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களில், 'உர்பசர்சுமித்' என்ற தனியார் நிறுவனம், துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகிறது.தெருவிற்கு, இரண்டு குப்பை தொட்டிகள் வைத்து, பேட்டரி வாகனங்கள் வாயிலாக குப்பை அகற்றி வருகின்றனர்.இந்நிலையில், கோடம்பாக்கம் மண்டலம், கே.கே.நகரில், சர்.ஏ.பி., பட்ரோ சாலை உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இவர்களுக்கு, வீடுகளில் சேகரமாகும் குப்பையை கொட்டுவதற்கு, தெருக்களில், குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.இதை தவிர்த்து, சர்.ஏ.பி., பட்ரோ சாலையில் உள்ள, அம்மா உணவகம் அருகே, ஒரு இடத்தில், 17 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அங்கு ஆய்வு மேற்கொண்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண் டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE