தனியார் நிறுவன அதிகாரியின் கார் கண்ணாடியை உடைத்து, 1.10 லட்சம் ரூபாய் மற்றும் ஆவணங்கள் திருடி சென்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, தி.நகரைச் சேர்ந்தவர் ராம்குமார், 50; தனியார் நிறுவன அதிகாரி. நேற்று முன்தினம், சோழவரம் அருகே உள்ள கிடங்கில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக காரில் சென்றார்.சோழவரம் அடுத்த, தேவனேரியில், சென்னை- - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஓட்டலில் காரை நிறுத்தி சென்றார்.திரும்பி வந்து பார்த்தபோது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே பார்த்தபோது, அங்கு வைத்திருந்த, 1.10 லட்சம் ரூபாய் மற்றும் வங்கி ஆவணங்கள் உள்ளிட்டவை திருடு போயிருப்பது தெரிந்தது. இது குறித்து, ராம்குமார், சோழவரம் போலீசில் அளித்த புகாரையடுத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE