எண்ணுார்; எண்ணுார் விரைவு சாலையில், சேதமடைந்த தெரு விளக்கால், இரவு நேரங்களில், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.சென்னை, எண்ணுார் விரைவு சாலை, பர்மா நகர் அருகே, லாரிகள் மோதி, இரு தெருவிளக்குகளும்; பெரிய குப்பம் - தாழங்குப்பம் இடையே, ஐந்திற்கும் மேற்பட்ட, தெருவிளக்குகளும் லாரிகள் மோதி, திசை மாறி நிற்கின்றன.மேலும், பெரும்பாலான தெரு விளக்குகள் பழுதடைந்து காணப்படுகின்றன.இதனால், இரவு நேரங்களில், பள்ளம் மேடு மற்றும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, மீண்டும் தெருவிளக்குகளை எரிய வைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE