புழல்; தனியார் நிறுவன ஊழியர், மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.சென்னை, புழல் அடுத்த லட்சுமிபுரம், வெங்கடேஸ்வரா நகர், 3வது தெருவில் வசித்தவர் அன்பழகன், 52, அவர், சென்னையில் உள்ள, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.இந்நிலையில், நேற்று மாலை, 6:00 மணியளவில், அவர், லட்சுமிபுரம் பாரதியார் தெரு சந்திப்பில், முகத்தில் ரத்தக் காயத்துடன் இறந்து கிடந்தார்.இது குறித்து, தகவல் அறிந்த புழல் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது, அங்குள்ள, 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை, ஆய்வு செய்தனர். அதில், 'டியோ' ரக, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரை சரமாரியாக அடித்தது தெரிந்தது.இதையடுத்து, கீழே விழுந்த அன்பழகன் உயிரிழந்தது, விசாரணையில் தெரிந்தது. அன்பழகனை அடித்துக் கொன்ற, மர்ம நபர்கள் யார் என்பது குறித்து, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE