சென்னை- தாம்பரம், பல்லாவரம் ஒட்டிய பகுதிகளில், சிட்லபாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஏரிக் கரையை பலப்படுத்தவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இவ்வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி, ''ஏரியில் உள்ள, 403 ஆக்கிரமிப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சிலர் வழக்கு தொடுத்துள்ளனர். இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.இதை பதிவு செய்த, நீதிபதிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற, அரசுக்கு அறிவுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE