வாலாஜாபாத்; வாலாஜாபாத் பேரூராட்சியில், பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த, இரண்டு டாஸ்மாக் கடைகளுக்கு, நேற்று, 'சீல்' வைக்கப்பட்டது.காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலையில், அரசுக்கு சொந்தமான மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இதில் இரு கடைகள், அரசு மற்றும் நிதி நாடும் பள்ளிகளுக்கு, இடையூறாக இருந்தன.பிரதான சாலையில் இருந்து, 100 மீட்டருக்கு குறைவாக இருப்பதால், இரு மதுக்கடைகளையும் மூட வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் பல கட்சியினர் கோரிக்கை மற்றும் போராட்டம் நடத்தி வந்தனர்.இந்நிலையில், டாஸ்மாக் நிர்வாகம், இரு கடைகளையும் பூட்டி, நேற்று, 'சீல்' வைத்தது. ஒரு கடையில் இருந்த மது வகைகளை, தனி வாகனத்தில் வைத்து, கிடங்குக்கு எடுத்துச் சென்றது. டாஸ்மாக் நிர்வாகத்தின் நடவடிக்கையை வரவேற்று, வாலாஜாபாத் நகர் முழுதும், நன்றி அறிவிப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE