மாமல்லபுரம்; கல்பாக்கம், அணுமின் நிலைய, இரண்டாம் அலகின், தொழில்நுட்ப பராமரிப்பிற்காக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில், சென்னை அணுமின் நிலையம் இயங்குகிறது. இங்கு, தலா, 220 மெ.வா., மின்திறனில், இரு மின் உற்பத்தி அலகுகள் அமைந்துள்ளன. முதல் அலகின், வினைகலனில், 2018 ஜன.,ல் தொழில்நுட்ப பழுது ஏற்பட்டு, மின் உற்பத்தி இன்றி, முடங்கி உள்ளது. இரண்டாம் அலகு இயங்கி, மின் உற்பத்தி நடக்கிறது.இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை, தொழில்நுட்ப பராமரிப்பிற்காக, மின் உற்பத்தி நிறுத்தப்படும். தற்போதும், பராமரிப்பு பணிகளுக்காக, இரண்டாம் அலகின் இயக்கம், நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு நிறுத்தப்பட்டது. முழு பராமரிப்பிற்கு பின், மீண்டும் உற்பத்தி துவக்கப்படும் என, நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE