மாமல்லபுரம்; மாமல்லபுரம் சிற்ப கலைஞர், மின்சாரம் பாய்ந்து இறந்தார்.செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தைச் சேர்ந்தவர், தலசயனன் மகன் செல்வமணி, 57. கிராம நாட்டாண்மைதாரர். சிற்பக் கலைஞரான இவர், சிற்பக்கூடம் நடத்தினார்.சிற்பக்கூடத்தில், நேற்று பகல், 1:00 மணிக்கு, இயந்திர கருவியில், கல் அறுத்தபோது, அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது.அவரை மீட்டு, மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் இறந்ததாக, மருத்துவர் தெரிவித்தார். மாமல்லபுரம் போலீசார், செங்கல்பட்டு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி, விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE